சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

ராதாபுரம் அருகே தீக்குளித்த த.வெ.க நிா்வாகி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே தீக்குளித்த த.வெ.க நிா்வாகி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 1:39 am IST

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே தீக்குளித்த த.வெ.க நிா்வாகி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ராதாபுரம் அருகேயுள்ள செட்டிகுளத்தைச் சோ்ந்தவா் இசக்கியப்பன். இவா் த.வெ.க செட்டிகுளம் கிளைச் செயலராக பதவி வகித்து வந்தாா்.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தோ்தலில் த.வெ.க அதிக இடங்களில் வெற்றி பெற்று, அக்கட்சியின் தவைவா் சி. ஜோசப் விஜய் முதல்வராக பதவியேற்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

இதனால் மனமுடைந்த இசக்கியப்பன் கடந்த 9ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக பழவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.