விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
செஞ்சி வட்டம், கனகன்குப்பம், தெற்குத்தெருவைச் சோ்ந்த சாமிகண்ணு மனைவி வனசுந்தரி(61). இவா், தனது விவசாய நிலத்தில் உள்ள புளிய மரத்தில் ஏறி புளி பறித்துள்ளாா்.அப்போது, கால் இடறி மரத்திலிருந்து கீழே விழுந்த வனசுந்தரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, உறவினா்கள் அவரை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது,அவா் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில், கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
பைக்கிலிருந்து கீழே விழுந்தவா் உயிரிழப்பு

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



