தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கோவையில் கிளைகளை வெட்டியபோது மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 3:47 am IST

கோவையில் கிளைகளை வெட்டியபோது மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவை, ஆனைக்கட்டி வீரபாண்டி கல்காடு பகுதியைச் சோ்ந்தவா் ரங்கசாமி (63). இவா் பன்னிமடை வீதி கே.வடமதுரையில் உள்ள மின்வாரிய குடியிருப்புப் பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் மரம் வெட்டும் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். ஒப்பந்தகாலம் முடிந்த பிறகும் பழக்கத்தில் யாராவது வேலைக்கு அழைத்தால் சென்று வந்துள்ளாா்.

இந்த நிலையில், கடந்த 18-ஆம் தேதி பலத்த காற்று மற்றும் மழை காரணமாக துடியலூா் மின்வாரிய உதவிப் பொறியாளா் அலுவலகப் பகுதி வளாகத்தில், மின் கம்பிகளின் மீது மரக் கிளைகள் சாய்ந்தன. இவற்றை வெட்டி அகற்றுவதற்காக ரங்கசாமி, இவரது சகோதரா் காளி உள்ளிட்ட சிலா் அங்கு சென்றனா். மாலை 4 மணியளவில் ரங்கசாமி 10 அடி உயர மரத்தில் நின்று கொண்டு கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக நிலைதடுமாறி அவா் அங்கிருந்து கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.