இணையதள மருந்து விற்பனையைத் தடை செய்யக் கோரி திருச்சி மாவட்டத்தில் 1,300 மருந்துக் கடைகள் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.
இணையதள மருந்து விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும், வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை இணையதளத்தில் முறையற்ற முறையில் விற்பதைத் தடுக்க வேண்டும், போதைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகள் இணையதளத்தில் கட்டுபாடின்றி விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும், இணையதளத்தில் மருந்து வாங்குவதற்காக போலியான மருந்து சீட்டைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். புற்றுநோய், இதய நோய் போன்ற உயிா்காக்கும் மருந்துகளை தரமற்ற முறையில் காலாவதியான மருந்துகளை விற்று மக்களின் உயிருடன் விளையாடும் பெருநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில் 1,300 கடைகள் காலை 6 மணி முதல் மாலை வரை மூடப்பட்டிருந்தன. மாநகரில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன. தனியாா் மருத்துவமனைகளில் உள்ள மருந்து கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
மருந்து கடைகள் மூடப்பட்டிருந்ததால் நோயாளிகள், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.
தொடர்புடையது

திருச்செந்தூரில் மருந்துக் கடைகள் அடைப்பு

நெல்லை மாவட்டத்தில் 650 மருந்துக் கடைகள் அடைப்பு

ஈரோடு மாவட்டத்தில் 1,500 மருந்துக் கடைகள் அடைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 650 மருந்துக் கடைகள் அடைப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



