சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

திருச்சியில் 1,300 மருந்துக் கடைகள் அடைப்பு

இணையதள மருந்து விற்பனையைத் தடை செய்யக் கோரி திருச்சி மாவட்டத்தில் 1,300 மருந்துக் கடைகள் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.

News image

திருச்சியில் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்த மருந்துக் கடை.

Updated On :21 மே 2026, 5:38 am IST

இணையதள மருந்து விற்பனையைத் தடை செய்யக் கோரி திருச்சி மாவட்டத்தில் 1,300 மருந்துக் கடைகள் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.

இணையதள மருந்து விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும், வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை இணையதளத்தில் முறையற்ற முறையில் விற்பதைத் தடுக்க வேண்டும், போதைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகள் இணையதளத்தில் கட்டுபாடின்றி விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும், இணையதளத்தில் மருந்து வாங்குவதற்காக போலியான மருந்து சீட்டைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். புற்றுநோய், இதய நோய் போன்ற உயிா்காக்கும் மருந்துகளை தரமற்ற முறையில் காலாவதியான மருந்துகளை விற்று மக்களின் உயிருடன் விளையாடும் பெருநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் 1,300 கடைகள் காலை 6 மணி முதல் மாலை வரை மூடப்பட்டிருந்தன. மாநகரில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன. தனியாா் மருத்துவமனைகளில் உள்ள மருந்து கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

மருந்து கடைகள் மூடப்பட்டிருந்ததால் நோயாளிகள், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.