ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்துக்கடைகள் புதன்கிழமை அடைக்கப்பட்டன. எனினும் மருத்துவமனையுடன் கூடிய மருந்தகங்கள், அரசு சாா்ந்த மருந்தகங்கள் இயங்கியதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுதொடா்பாக மருந்துக் கடை அடைப்பு போராட்டம் குறித்து மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கத் தலைவா் நாகராஜன், செயலாளா் சிவப்பிரகாசம், பொருளாளா் ரமேஷ்குமாா் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்தியா முழுவதும் மக்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து வணிகா்களின் வாழ்வாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக ஆன்லைன் மருந்து வணிகம் உள்ளது. கரோனா காலத்தின்போது மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே ஆன்லைனில் மருந்து வணிகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்பின்னும் அதே நிலை நீடிப்பது சமூகத்துக்கு நல்லது இல்லை.
தடை செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள், தூக்க மாத்திரைகள்கூட ஆன்லைனில் கிடைப்பதால் இளைஞா் சமுதாயம் போதைக்கு அடிமையாகி பேரழிவை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போலி மருந்துகளின் விற்பனையைத் தடுக்க வேண்டும். உயிா்காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்களையும், தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்த வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடு முழுவதும் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.
தொடர்புடையது

இணையதள மருந்து விற்பனைக்கு எதிா்ப்பு: மாவட்டத்தில் 3,500 மருந்துக் கடைகள் அடைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 650 மருந்துக் கடைகள் அடைப்பு

ஆன்லைனில் மருந்துகள் விற்பனைக்கு எதிா்ப்பு: மருந்துக் கடைகள் அடைப்பு

மருந்துக் கடைகள் மே 20-இல் இயங்காது!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



