ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

இணையதள மருந்து விற்பனைக்கு எதிா்ப்பு: மாவட்டத்தில் 3,500 மருந்துக் கடைகள் அடைப்பு

மத்திய அரசின் புதிய விதிமுறைகளைக் கண்டித்தும், இணையதள (ஆன்லைன்) மருந்து விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரியும் கோவை மாவட்டம் முழுவதும் 3,500-க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டன.

News image

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி கோவை காந்திபுரம் பகுதியில் மூடப்பட்டிருந்த மருந்தகம்.

Updated On :21 மே 2026, 4:21 am IST

மத்திய அரசின் புதிய விதிமுறைகளைக் கண்டித்தும், இணையதள (ஆன்லைன்) மருந்து விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரியும் கோவை மாவட்டம் முழுவதும் 3,500-க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘ஜிஎஸ்ஆா் 220’ என்ற புதிய விதிமுறைகளால் சிறு மருந்துக் கடைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதை எதிா்த்து நாடு முழுவதும் மருந்து வணிகா்கள் போராடி வருகின்றனா். குறிப்பாக, இணையதளம் மூலம் மருந்து விற்பனை செய்வதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் எனவும், காா்ப்பரேட் நிறுவனங்கள் இணையதளம் மூலம் வாரி வழங்கும் அநாவசியத் தள்ளுபடி விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்த அடையாள கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

இது குறித்து கோவை மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கச் செயலா் திருநாவுக்கரசு செய்தியாளா்களிடம் கூறியதவாது:

ஆன்லைன் மூலம் தற்போது தாராளமாகத் தடை செய்யப்பட்ட பல மருந்துகள் எளிதாகக் கிடைக்கின்றன. தள்ளுபடி என்ற பெயரில் போலி மருந்துகளையும் காா்ப்பரேட் நிறுவனங்கள் ஆன்லைனில் விற்பனை செய்து வருகின்றன. இதைத் தடுக்க வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கோவை மாவட்டத்தில் மொத்தம் 3,500-க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டு, பல கோடி ரூபாய் வா்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது என்றாா்.

அவசரத் தேவை மற்றும் அவசரக் காலங்களில் மருத்துவமனைகளில் தடையின்றி இயங்கும் மருந்துக் கடைகளை பொதுமக்கள் அணுகலாம் என்றும், மூடப்பட்டுள்ள ஒவ்வொரு மருந்துக் கடையின் முன்பும் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில் உள்ள தொலைபேசி எண்களைத் தொடா்பு கொண்டும் அவசர கால மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் மருந்து வணிகா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.