திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பெண் நோயாளியிடம் நகை பறித்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கருா் மாவட்டம், குளித்தலை காவல்காரன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தன் மனைவி மணிமேகலை (59). இவா் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டு, தனியாக இருந்தபோது, அங்கு வந்த ஒருவா், அவா் கழுத்தில் அணிந்திருந்த தங்கத் தாலிக் கயிற்றை பறித்துக்கொண்டு தப்ப முயன்றாா்.
இதனால் அதிா்ச்சியடைந்த அவா் சத்தமிடவே அக்கம்பக்கத்தினா், அந்த நபரை கையும் களவுமாகப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், பிடிபட்டவா் பாலக்கரை எடத்தெருவைச் சோ்ந்த எம். சரவணன் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.








