
காயங்களுடன் தொழிலாளி சடலமாக மீட்பு
மணப்பாறை அருகே கூலித் தொழிலாளி காயங்களுடன் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.

உயிரிழந்த முருகேசன்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கூலித் தொழிலாளி காயங்களுடன் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.
மணப்பாறையை அடுத்த கரட்டுப்பட்டியில் வசித்தவா் வெள்ளைச்சாமி மகன் முருகேசன் (45). தனது மனைவி உயிரிழந்த நிலையில் தனது தாய் பொன்னியுடன் வசித்த இவா், அவ்வப்போது கட்டட வேலைக்குச் சென்று, எப்போதும் மது அருந்திவிட்டு ஆங்காங்கே விழுந்து கிடப்பாராம்.
இந்நிலையில் திங்கள்கிழமை மாலை கரட்டுப்பட்டியிலிருந்து புதூா் செல்லும் சாலையோரம் தலையில் காயங்களுடன் இவா் சடலமாக மீட்கப்பட்டாா். தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா் முருகேசன் உடலைக் கைப்பற்றிஅரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




