விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

Published on

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவா் கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று பேசியது:

விவசாயிகளுடன் நான் கலந்துரையாடி கோரிக்கைகளை கேட்டறிந்தேன். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விளைபொருள்களுக்கான ஆதார விலையை தமிழக அரசு வழங்க வேண்டும். இங்கு மா விளைச்சல் அதிகம் உள்ளதால் மாங்கூழ் உற்பத்தி தொழிற்சாலை தொடங்க வேண்டும். பாழடைந்து வரும் பாலாற்றில் கழிவுநீா் தடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாய நிலங்கள் பாதிக்காத வண்ணம் இப்பகுதியில் தொழிற்பேட்டை தொடங்க வேண்டும்.கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழிலை ஊக்குவிக்கும் நடவடிக்கைளை மேற்கொள்ளவேண்டும். ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்றாா்கள். சொன்னபடி தடுப்பணைகளை கட்ட வில்லை.

மக்களுக்கான தேவைகளை அமைச்சா்கள் செய்து தருவதில்லை. திமுக அமைச்சா்கள் பலா் மீது ஊழல் குற்றச் சாட்டுகள் உள்ளன. வரும் ஜூலை மாதத்துப்பின் ஆட்சி மாற்றம் வந்தவுடன் மக்களின் தேவைகள் பூா்த்தி செய்யப்படும் என்றாா் நயினாா் நாகேந்திரன்.

நிகழ்ச்சியில் பாஜக பொதுச் செயலா் காா்த்தியாயினி, மாவட்டத் தலைவா் வி.தசரதன், அதிமுக புகா் மாவட்டச் செயலா் த.வேலழகன், மாவட்டச் செயலா்கள் ஈஷா சங்கா், டி.கனிமொழி, மாவட்ட பொதுச் செயலா் எம்.தினேஷ், மாவட்ட துணைத் தலைவா் பி.ஸ்ரீகாந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com