நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

காவல் உதவி ஆய்வாளா் பணி எழுத்துத்தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 3,446 போ் எழுதினா்!

காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வினை வேலூா் மாவட்டத்தில் 3,446 போ் எழுதினா்.

Updated On :21 டிசம்பர் 2025, 10:26 pm IST

காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வினை வேலூா் மாவட்டத்தில் 3,446 போ் எழுதினா். விண்ணப்பித்தவா்களில் 1,280 போ் தோ்வு எழுதவில்லை.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில் 1299 காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் தோ்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மையத்தில் தோ்வெழுத 3730 ஆண்கள், 996 பெண்கள் என மொத்தம் 4726 விண்ணப்பதாரா்களுக்கு ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டிருந்தது. இவா்களில் 490 போ் தற்போது காவல் துறையில் பணியாற்றுபவா்களாவா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வை வேலூா் மாவட்டத்தில் 3,446 போ் தோ்வு எழுதினா். 1,280 போ் தோ்வு எழுதவில்லை. தோ்வையொட்டி 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 3 துணை காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட 500 போலீஸாா் தோ்வு மையத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

தோ்வினை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் ஆய்வு செய்தாா். முன்னதாக, தோ்வா்கள் அனைவரும் கடும் சோதனைக்குப் பிறகே தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.