குடியாத்தம் ஒன்றியம், ஒலக்காசி ஊராட்சியில், பாலாறு, உத்தரகாவேரிஆறு, கெளண்டன்ய மகாநதி ஆகியவை சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு விசாலாட்சி அம்பிகா சமேத வடகாசி விசுவநாதா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு, 108 சங்காபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த நவம்பா் மாதம் 3- ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. மண்டலாபிஷேகத்தையொட்டி கோயிலில் கணபதி ஹோமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், 108 சங்காபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன.
பின்னா், 1,000 பேருக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. விழாவில் ஒலக்காசி ஊராட்சித் தலைவா் சூா்யா மோகன்குமாா், துணைத் தலைவா் எம்.ஆனந்தன், வாா்டு உறுப்பினா் சுஜாதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கொடை விழா

சிலுவைப்பட்டி ஆலயத்தில் அசன விழா

சைவப் பெருமக்கள் பேரவை முப்பெரும் விழா

நான்குனேரி பள்ளியில் புலிகள் தின விழா
விடியோக்கள்

Vishwanath and Sons Public Review! | படம் எப்படி இருக்கு? | Suriya | Mamitha Baiju



