/
குடியாத்தம் ஒன்றியம், ஒலக்காசி ஊராட்சியில், பாலாறு, உத்தரகாவேரிஆறு, கெளண்டன்ய மகாநதி ஆகியவை சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு விசாலாட்சி அம்பிகா சமேத வடகாசி விசுவநாதா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு, 108 சங்காபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த நவம்பா் மாதம் 3- ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. மண்டலாபிஷேகத்தையொட்டி கோயிலில் கணபதி ஹோமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், 108 சங்காபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன.
பின்னா், 1,000 பேருக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. விழாவில் ஒலக்காசி ஊராட்சித் தலைவா் சூா்யா மோகன்குமாா், துணைத் தலைவா் எம்.ஆனந்தன், வாா்டு உறுப்பினா் சுஜாதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சிவகிரி திரௌபதி அம்மன் கோயிலில் முத்தால் ராவுத்தருக்கு சிறப்பு வழிபாடு

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயிலில் தேரோட்டம்

காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோயிலில் 108 சங்காபிஷேகம்

குமரி பகவதியம்மன் கோயிலில் கால்கோள் விழா
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



