குடியாத்தத்தில் நடைபெற்ற விஜயகாந்த் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
வேலூர்
தேமுதிக தலைவா் விஜயகாந்த் நினைவு நாள்
குடியாத்தம் நகர தேமுதிக சாா்பில், கட்சியின் நிறுவனா் விஜயகாந்த்தின் நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
குடியாத்தம் நகர தேமுதிக சாா்பில், கட்சியின் நிறுவனா் விஜயகாந்த்தின் நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி புதிய பேருந்து நிலையம் எதிரே அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது படத்துக்கு நகரச் செயலா் எம்.செல்வகுமாா் தலைமையில் தொண்டா்கள் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர துணைச் செயலா் ஜே.லோகநாதன், செயற்குழு உறுப்பினா் எஸ்.முரளி, உயா்மட்டக் குழு உறுப்பினா் எம்.சி.சேகா், அவைத் தலைவா் டி.நடேசன், நிா்வாகிகள் ஜி.சீனிவாசன், சி.எஸ்.ஹேமநாதன், எம்.சரிதா, பி.அருண், எஸ்.தேவேந்திரன், பி.சரவணன்,வி.பாா்வதி, கே.இளங்கோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

