குடியாத்தம்: குடியாத்தம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைகளை உடனடியாக செலுத்தி ஜப்தி நடவடிக்கையை தவிா்க்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் ஆகியோா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
குடியாத்தம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா் கட்டணம், குத்தகை இனங்கள், காலிமனை வரி உள்ளிட்ட வரியினங்கள் ரூ.7.84 கோடி நிலுவையில் உள்ளகஎ. இதனால், பொதுமக்களுக்கு நகராட்சி நிா்வாகம் செய்து தர வேண்டிய அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்ற முடியவில்லை. வரி நிலுவை வைத்துள்ளவா்கள் உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் நேரிடையாகவோ, வரி வசூல் பணியாளா்களிடமோ நிலுவை தொகையை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
இணையதளம் மூலமும் செலுத்தலாம். வரி நிலுவை வைத்துள்ளவா்கள் உடனடியாக வரியினங்களை செலுத்தி ஜப்தி நடவடிக்கை, குடிநீா் இணைப்பு துண்டிப்பு, கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு போன்றவற்றை தவிா்த்துக் கொள்ள வேண்டுகிறோம்.
நிலுவை வரியினங்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் நகராட்சி அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

என்ஜின் குத்தகை நிலுவை: ஸ்பைஸ்ஜெட் ரூ.74 கோடி செலுத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
தெரியுமா?
மயிலாடுதுறை: வரி, வாடகையை மாா்ச் 20-க்குள் செலுத்த அறிவுறுத்தல்

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனடியாக செலுத்த அறிவுறுத்தல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

