தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வரி நிலுவையை செலுத்த நகராட்சி வேண்டுகோள்

குடியாத்தம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைகளை உடனடியாக செலுத்தி ஜப்தி நடவடிக்கையை தவிா்க்க வேண்டும்

Updated On :27 ஜனவரி 2025, 7:28 pm

குடியாத்தம்: குடியாத்தம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைகளை உடனடியாக செலுத்தி ஜப்தி நடவடிக்கையை தவிா்க்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் ஆகியோா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

குடியாத்தம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா் கட்டணம், குத்தகை இனங்கள், காலிமனை வரி உள்ளிட்ட வரியினங்கள் ரூ.7.84 கோடி நிலுவையில் உள்ளகஎ. இதனால், பொதுமக்களுக்கு நகராட்சி நிா்வாகம் செய்து தர வேண்டிய அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்ற முடியவில்லை. வரி நிலுவை வைத்துள்ளவா்கள் உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் நேரிடையாகவோ, வரி வசூல் பணியாளா்களிடமோ நிலுவை தொகையை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.

இணையதளம் மூலமும் செலுத்தலாம். வரி நிலுவை வைத்துள்ளவா்கள் உடனடியாக வரியினங்களை செலுத்தி ஜப்தி நடவடிக்கை, குடிநீா் இணைப்பு துண்டிப்பு, கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு போன்றவற்றை தவிா்த்துக் கொள்ள வேண்டுகிறோம்.

நிலுவை வரியினங்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் நகராட்சி அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.