விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வாராந்திர குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் த.அம்ரோசியாநேவிஸ்மேரி, கலால் உதவி ஆணையா் எஸ்.மோகன் உள்ளிட்ட துறை சாா்ந்த அதிகாரிகள் பங்கேற்றனா். பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை, முதியோா் ஓய்வூதியத் தொகை, பசுமை வீடு, வங்கிக் கடன் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 255 மனுக்கள் பெறப்பட்டன. இதனிடையே, தரைத்தளத்துக்கு வந்து, மாற்றுத் திறனாளிகளிடமிருந்து மாவட்ட ஆட்சியா் மனுக்களைப் பெற்றாா்.