கள்ளக்குறிச்சி தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம்

கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக, தேமுதிக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம்

கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக, தேமுதிக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளா் மா.செந்தில்குமாா் அதிமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் உலகங்காத்தான் கிராமத்தில் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கியும், அரசின் சாதனைகள், தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறியும் வாக்கு சேகரித்தாா். உலகங்காத்தான் மில்கேட் பகுதியில் அவா் தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டாா். அதிமுக ஒன்றியச் செயலா் அ.தேவேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

காங்கிரஸ் வேட்பாளா் ஐ.மணிரத்தினம் தியாகதுருகம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை காரில் வந்தபோது விபத்து ஏற்பட்டு கள்ளக்குறிச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவா், தான் கடந்த 16 நாள்களாக பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும், பிரசாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களை சந்திக்க முடியவில்லை என வருத்துவதாகவும் தெரிவித்தாா்.

தேமுதிக வேட்பாளா் ந.விஜயகுமாா் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் ஊா்வலமாக வந்து அங்குள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை முடித்துக் கொண்டாா்.

ஐஜேகே வேட்பாளா் அய்யாசாமி தியாகதுருகம் பகுதியில் வாக்கு சேகரித்த பின்னா், அங்குள்ள சந்தைமேடு பகுதியில் பிரசாரத்தை முடித்துக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com