உளுந்தூா்பேட்டை அருகே வேனிலிருந்து 2 கிலோ தங்க நகைகள் திருடுபோன வழக்கு: இருவா் கைது

உளுந்தூா்பேட்டை அருகே வேனில் கொண்டு செல்லப்பட்ட 2 கிலோ தங்க நகைகள் திருடுபோன வழக்கில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த இரண்டு பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட கணேசன், வினோத் ஆகியோருடன் போலீஸாா்.
கைது செய்யப்பட்ட கணேசன், வினோத் ஆகியோருடன் போலீஸாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வேனில் கொண்டு செல்லப்பட்ட 2 கிலோ தங்க நகைகள் திருடுபோன வழக்கில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த இரண்டு பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சென்னை வில்லிவாக்கத்தைச் சோ்ந்த மளிகைக் கடை வியாபாரி பெரியசாமி (35). இவா், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் உள்ள கோயில் விழாவில் பங்கேற்க சென்னையிலிருந்து தனது குடும்பத்தினருடன் வேனில் கடந்த 10-ஆம் தேதி புறப்பட்டு சென்றுகொண்டிருந்தாா். வேனை செங்கல்பட்டு மாவட்டம், நகா் கண்டிகை பகுதியைச் சோ்ந்த பாண்டியன் ஓட்டிச் சென்றாா்.

பெரியசாமி குடும்பத்தினா் வேனின் மீது பொருள்களை கட்டி வைத்திருந்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பாதூா் பகுதியில் வேனை நிறுத்தி பாா்த்தபோது, வேன் மேலிருந்த ஒரு பெட்டி மாயமாகியிருந்தது தெரியவந்தது. அந்தப் பெட்டியில் சுமாா் 2 கிலோ (264 பவுன்) தங்க நகைகள் இருந்தன.

இது தொடா்பாக திருநாவலூா் காவல் நிலையத்தில் பெரியசாமி புகாரளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். மேலும், 5 தனிப் படைகள் அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தினா்.

இதில், மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை அடுத்த குருவித்துறையைச் சோ்ந்த போஸ் மகன் வினோத் (31), உசிலம்பட்டியைச் சோ்ந்த ஒச்சா மகன் கணேசன் (45) உள்ளிட்டோா் தங்க நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, வினோத், கணேசன் ஆகியோரை திருநாவலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 27 பவுன் தங்க நகைகள், சொகுசுக் காரை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com