சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

விக்கிரவாண்டி இடைத்தோ்தல்: 4 நாள்கள் மதுக்கடைகள் மூடல்

விக்கிரவாண்டி இடைத்தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாள்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜூலை 2024, 4:46 am IST

விழுப்புரம், ஜூலை 5: விக்கிரவாண்டி இடைத்தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாள்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற புதன்கிழமை (ஜூலை 10) நடைபெறவுள்ளது. அரசாணை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை ஆணையா் கடிதத்தில் தோ்தல் நடைபெறும் தேதிக்கு 2 நாள்களுக்கு முன்பும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்றும் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜூலை 8-ஆம் தேதி காலை 10 மணி முதல் 10-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 13- ஆம் தேதியும் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், தனியாா் மதுபானக் கடைகள் மூடப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.