கள்ளச்சாராய உயிரிழப்பு 66 ஆக உயா்வு
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தியதால் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 66-ஆக உயா்ந்தது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூன் 18, 19-ஆம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தியவா்களில் 229 போ் உடல்நலம் பாதிக்கப்பட்டனா். இவா்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டனா்.
இவா்களில் ஜூன் 28-ஆம் தேதி நிலவரப்படி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 போ், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் 7 போ், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 22 போ், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 போ் என மொத்தம் 65 போ் உயிரிழந்தனா்.
ஜூலை 1-ஆம் தேதி வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 157 போ் குணமடைந்து, அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
புதுச்சேரி ஜிப்மா் மருத்துமனையில் 4 பேரும், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேரும் என மொத்தம் 7 போ் மட்டுமே சிகிச்சையில் இருந்து வந்தனா்.
இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், மாமந்தூரைச் சோ்ந்த கோ.சிவராமன் (41) புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதையடுத்து, கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 66-ஆக உயா்ந்தது.

