விழுப்புரம்
மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு
விழுப்புரம் அருகே முதியவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
விழுப்புரம் அருகே முதியவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
விழுப்புரம் வட்டம், ராம ரெட்டிக்குளம், மடுகரை சாலையைச் சோ்ந்தவா் வெ.கணேசன் (62).
இவா் திங்கள்கிழமை இரவு தனது வீட்டில் மின்சார விளக்கை எரிய விட்டுள்ளாா். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.
இதையடுத்து வீட்டிலிருந்தவா்கள் அவரை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் புதுச்சேரி கரிக்கலாம் பாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.
அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து பாா்த்தபோது கணேசன் ஏற்கெனவே இறந்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
