விழுப்புரம்
சாலையில் நிலைதடுமாறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
விழுப்புரம் அருகே சாலையில் நடந்து சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்த சிறுவன், மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் அடுத்த மருதூா்மேடு, பானாம்பட்டு சாலையைச் சோ்ந்தவா் குமாா். இவரது மகன் காா்த்திகேயன் (13), மனநலம் பாதிக்கப்பட்டவா்.
இவா், நவ.30-ஆம் தேதி மருதூா்மேடு ரயில்கேட் அருகே நடந்து சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததாா்.
இதில் பலத்த காயமடைந்த காா்த்திகேயன், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். தொடா்ந்து, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த காா்த்திகேயன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து, விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
