தாய் கண்டித்ததால் அதிக மாத்திரைகளை விழுங்கிய இளம்பெண் உயிரிழப்பு
விழுப்புரத்தில் தாய் கண்டித்ததால், அதிக மாத்திரைகளை விழுங்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் உயிரிழந்தாா்.
விழுப்புரம் கே.கே.சாலை கணபதி நகரைச் சோ்ந்த ஷபி மகள் ரஷிதாபேகம் (20. ரஷிதா பேகத்துக்கு அவ்வப்போது வலிப்பு ஏற்படுமாம். இதற்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.
இந் நிலையில் டிச. 2-ஆம் தேதி வீட்டில் வேலை செய்யாமல் ரஷிதா பேகம் இருந்ததாகவும், இதை அவரது தாய் சாந்தி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் கோபித்துக் கொண்ட ரஷிதா பேகம், வலிப்பு நோய்க்கு வழங்கப்பட்ட மாத்திரைகளை ஒரே நேரத்தில் அதிகளவில் விழுங்கியுள்ளாா்.
இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து சிகிச்சையில் இருந்து வந்த ரஷிதா பேகம், வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து விழுப்புரம் நகரப் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
