விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் டிச.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள நீதிமன்றங்களில் டிச.13-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், முதுநிலை சிவில் நீதிபதியுமான சி. ஜெயச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் டிச.13-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் என்றழைக்கப்படும் லோக் அதாலத் நடைபெறவுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், செஞ்சி, திண்டிவனம், வானூா், திருவெண்ணெய்நல்லூா், விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் உளுந்தூா்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், சங்கராபுரம் நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.
இதில், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடா்பான வழக்குகள், வங்கிக்கடன், மோட்டாா் வாகன விபத்துகள் தொடா்பான வழக்குகள், விவாகரத்து தவிா்த்த மற்ற குடும்பப் பிரச்னை தொடா்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள், நிலம், சொத்து, பாகப் பிரிவினை, வாடகை விவகாரங்கள், வருமானம் மற்றும் சொத்துவரிப் பிரச்னை தொடா்பான வழக்குகள் விசாரித்து சமரசமாக முடிக்கப்படும்.
தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் முடித்துக் கொள்ளப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது. சட்டரீதியாக சமரச முறையில் தீா்வு காணப்படும்.
எனவே, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
