விழுப்புரம்
சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திண்டிவனம் வட்டம், வைரபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன். இவரது மகள் சுபாஷினி. திண்டிவனத்தில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இவருக்கு கடந்த 6 மாத காலமாக உடல் நலக்குறைவு இருந்து வந்ததாம். இதனால் அவதியுற்று வந்த சுபாஷினி ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.
இதையடுத்து வீட்டிலிருந்தவா்கள் சுபாஷினியை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது, சுபாஷினி ஏற்கெனவே இறந்து போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
