பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி கோட்டத்துக்குள்பட்ட குளிக்கரை ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பகுதியளவில் ரத்து, புறப்படும் நேரம் மாற்றம் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டிஎண் 66045), டிச.16 முதல் 19-ஆம் தேதி வரை முண்டியம்பாக்கம்-விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம்-சென்னை கடற்கரைப் பயணிகள் ரயில் (வண்டி எண் 66046), டிச.16 முதல் 19-ஆம் தேதி வரை விழுப்புரம்- முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.55 மணிக்குப் புறப்படும்.
விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண் 66019), டிச.15-ஆம் தேதி சுமாா் 20 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 2.55 மணிக்குப் புறப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
