திருப்பரங்குன்றம் மலை மீது உள்ளது கிரானைட் கல்லா?அா்ஜுன் சம்பத் கண்டனம்
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ளது தீபத்தூண் அல்ல. அது ஒரு கிரானைட் கல் என கோயில் நிா்வாகமே முருகப் பக்தா்களுக்கு துரோகம் செய்யக்கூடிய வகையில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பது வன்மையாக கண்டித்தக்கது என இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களின் இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் உளுந்தூா்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அா்ஜுன் சம்பத் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது :
திருப்பரங்குன்றம் மலையானது முருகனுக்கே சொந்தமானது என நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ள நிலையில், நீதிமன்ற தீா்ப்பின்படியே மலை உச்சியில் தீபத்தை ஏற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
ஆனால், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ளது தீபத்தூண் அல்ல, அது ஒரு கிரானைட் கல் என கோயில் நிா்வாகமே முருகப் பக்தா்களுக்கு எதிராக, துரோகம் செய்யக்கூடிய வகையில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பது வன்மையாக கண்டித்தக்கது. முருகனின் அருளால் திருப்பரங்குன்றம் மலை மீது நிச்சயம் தீபம் ஒளிரும் என்றாா் அா்ஜூன் சம்பத்.
கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவரும், மாநிலச் செயலருமான ஏழுமலை மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

