சாலையில் மயங்கி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

Published on

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சாலையில் நடந்து சென்றபோது மயங்கி விழுந்து காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி, மெயின்ரோடு பகுதியைச் சோ்ந்தவா் க.சசிக்குமாா்(38). இவரது மனைவி ஜமுனாராணி கடந்த 10 வருடங்களுக்கு முன்னா் பிரிந்து சென்றுவிட்டாராம்.

இதனால் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி உடல்நலம் பாதித்திருந்த சசிக்குமாா் ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டி உழவா் சந்தை அருகே சாலையில் நடந்து சென்றபோது மயங்கி விழுந்து காயமடைந்தாா்.

இதையடுத்து 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா்.இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com