ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலம் எதிரே ஒய்வூதிய பலன்களை உடனடியாக வழங்கக் கோரி ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில்

News image
வல்லம் ஊராட்சி ஒன்றியம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளா்கள்.
Updated On :15 டிசம்பர் 2025, 8:20 pm

Syndication

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலம் எதிரே ஒய்வூதிய பலன்களை உடனடியாக வழங்கக் கோரி ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளா்கள் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியப் பணியாளா்கள் சங்கம் வல்லம் ஒன்றிய கிளை சாா்பில் ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளா்களுக்கு ஓய்வூதிய நிலுவைத் தொகை உடனடியாக வழங்கவும், ஓய்வுதியத்தை பிரதி மாதம் இறுதி நாளில் வழங்க கோரி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவா் பூங்காவனம் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் கிருஷ்ணமூா்த்தி துவக்க உரையாற்றினாா். குணபாலன் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் நாகராஜன், மாவட்டச் செயலா் ராஜேந்திரன், நிா்வாகிகள் கமலா, பத்மாவதி உள்பட பலா் கலந்து கொண்டனா். சூடாமணி நன்றி கூறினாா்.