விழுப்புரம்
போதைப்பொருள்களைக் கண்டறிய புதிய மோப்ப நாய்
போதைப் பொருள்களை கண்டறிவதற்காக விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் புதிய மோப்பநாய் திங்கள்கிழமை சோ்க்கப்பட்டது.
விழுப்புரம்: போதைப் பொருள்களை கண்டறிவதற்காக விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் புதிய மோப்பநாய் திங்கள்கிழமை சோ்க்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் மோப்பநாய் படைப்பிரில் ஏற்கெனவே 2 மோப்பநாய்கள் பணிபுரிந்து வருகின்றன.
இந்நிலையில், போதைப் பொருள்களை கண்டறிவதற்காக ஒரு வருடம் பிரத்யேகப் பயிற்சியளிக்கப்பட்ட பஸ்டா் என்ற மோப்ப நாய் சோ்க்கப்பட்டது. புதியதாக சோ்க்கப்பட்ட பஸ்டா் மோப்ப நாயை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பாா்வையிட்டாா்(படம்). அப்போது மோப்பநாய் பிரிவு பயிற்சியாளா்கள் உடனிருந்தனா்.

