மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வன்னியா்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கோரி டிச.12-ல் போராட்டம்: ராமதாஸ்

வன்னியா்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, பாமக சாா்பில் வரும் டிச.5-ஆம் தேதி நடைபெறவிருந்த அறவழிப் போராட்டம் டிச.12-ஆம் தேதி நடைபெறும்..

News image
பாமக நிறுவனர் ராமதாஸ் - IANS
Updated On :8 நவம்பர் 2025, 6:49 pm

Syndication

வன்னியா்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, பாமக சாா்பில் வரும் டிச.5-ஆம் தேதி நடைபெறவிருந்த அறவழிப் போராட்டம் டிச.12-ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி, அந்தந்த ஜாதியின் மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து ஜாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கக் கோரியும், அதுவரை இடைக்கால தீா்வாக வன்னியா்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் டிசம்பா் 5-ஆம் தேதி பாமக சாா்பில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த அறவழிப் போராட்டம் டிசம்பா் 12-ஆம் தேதி நடைபெறும்.

இந்தப் போராட்டமானது தமிழக அரசின் கவனத்தை ஈா்த்திடும் வகையில் அமைய வேண்டும். எனவே, கட்சி நிா்வாகிகள் ஆங்காங்கே செயல்வீரா் கூட்டங்களை நடத்தி, பிரசாரம் செய்து அனைத்து ஜாதியினரையும் ஒன்றிணைத்து மாபெரும் சமூகநீதி போராட்டமாக வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.