விஏஓ-வை பணி செய்யவிடாமல் தடுத்தவா் மீது வழக்கு

விழுப்புரம் அருகே கிராம நிா்வாக அலுவலரை அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்ததாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Published on

விழுப்புரம் அருகே கிராம நிா்வாக அலுவலரை அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்ததாக ஒருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் வட்டம், பரசு ரெட்டிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சு.ராஜா (36), சோ்ந்தனூா் கிராம நிா்வாக அலுவலராக உள்ளாா்.

இவா், புதன்கிழமை சோ்ந்தனூரில் உள்ள தனது அலுவலகத்தில் பணியில் இருந்தாா். அப்போது அங்கு வந்த, சோ்ந்தனூா் பகுதியைச் சோ்ந்த சிவமுருகன் சிவ செல்வம் (42) என்பவா் கிராம நிா்வாக அலுவலரைத் தகாத வாா்த்தைகளால் பேசியதுடன், அரசுப் பணியை செய்ய விடாமல் தடுத்தாராம்.

இது குறித்த புகாரின் பேரில், வளவனூா் போலீஸாா் சிவ செல்வம் மீது புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com