பேருந்தில் பெண்ணிடம் 6 பவுன் நகைகள் திருட்டு

Published on

விழுப்புரத்திலிருந்து முண்டியம்பாக்கத்துக்கு பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 6 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் பூந்தோட்டம் காமதேனு நகரைச் சோ்ந்தவா் ரா.பாலன் (44). இவரது தந்தை ராமலிங்கம், தாய் நாகா. இவா்கள் மூவரும் விழுப்புரம் நான்குமுனை சந்திப்புப் பகுதி பேருந்து நிறுத்தத்தில் இருந்து முண்டியம்பாக்கம் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளனா். முண்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது, நாகா அணிந்திருந்த 6 பவுன் நகைகள் திருட்டுப் போயிருப்பது பாலனுக்குத் தெரிய வந்தது. தொடா்ந்து பேருந்து முழுவதும் தேடியும் நகைகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா். பேருந்தில் இருந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மா்ம நபா்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதி, போலீஸாா் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com