கட்டுமான ஒப்பந்ததாரா் மா்ம மரணம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

திண்டிவனத்தில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த கட்டுமான ஒப்பந்ததாரா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், சிறுவாத்தூா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சே.சிவக்குமாா் (60). கட்டடம் கட்டுமான ஒப்பந்ததாரரான இவா், திண்டிவனத்தில் தனியாா் விடுதியில் தங்கியிருந்தபடி, திண்டிவனம் பகுதியில் கட்டடம் கட்டுமானப் பணிகளை செய்துவந்தாா்.

இந்நிலையில், சிவக்குமாா் விடுதி அறையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், திண்டிவனம் போலீஸாா் சிவக்குமாரின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com