சிதம்பரம் அருகேயுள்ள திருநாரையூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரிபுரசுந்தரி சுந்தரி சமேத ஸ்ரீ செளந்தரேஸ்வரர் கோயிலில் துவஜஸ்தம்பம் ( கொடி மரம் ) பிரதிஷ்டை புதன்கிழமை நடைபெற்றது.
கொடி மரம் பிரதிஷ்டையை முன்னிட்டு, செவ்வாய்கிக மாலை முதல் கால யாக பூஜையும், புதன்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையும் நடைபெற்றன. பின்னர், காலை மணி 10-15 மணிக்கு கொடி மரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருப்பனந்தாள் காசி வாசி யஜமான் சுவாமிகளும், சிதம்பரம் உ.வெங்கடேச தீட்சிதர் , கார்த்திகேயன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.