இடைநிலை ஆசிரியர் தேர்வு (தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு) எழுதிய மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ரா.அன்பழகன் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வில், முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் தனித் தேர்வர்களாக பங்கேற்று தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை வடலூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.