மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட நிர்வாகி டி.வெங்கடேசன் தலைமை வகித்தார். மத்திய மாவட்ட நிர்வாகி டி.கே.மூர்த்தி முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் நடிகை
ஸ்ரீபிரியா, காவல் துறை முன்னாள் உயரதிகாரி ஏ.ஜி.மெளரியா, சவுரிராஜன், சி.கே.குமரவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் ஸ்ரீபிரியா பேசியதாவது: மக்களிடம் மறதி என்ற நோய் இருப்பதால் பழைய தவறுகளை மறந்து மீண்டும், மீண்டும் ஒரே கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். எனவே, அனைவரும் அரசியல் அறிவு பெற வேண்டும். வாக்களிக்கும் முன்பு சிந்தித்து செயல்பட வேண்டும் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்து வருகிறது. ஆட்சி சரியாக இருந்தால் இது போன்ற காட்சிகளுக்கு வாய்ப்பில்லை. சிறுமிகள் வன்கொடுமை போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. ஆணும், பெண்ணும் சரிசமம் என சிறுவயது முதலே குழந்தைகளுக்கு தெரியப்படுத்தி அவர்களை வளர்க்க வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, மேற்கு மாவட்ட நிர்வாகி கே.ரபீக் வரவேற்றார். கிழக்கு மாவட்ட நிர்வாகி எஸ்.சரவணன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொறியியல் கலந்தாய்வு! ரேண்டம் எண் முக்கியத்துவம் பெறுவது ஏன்?

கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்

பெனால்டியில் கோல் அடித்த மெஸ்ஸி: ஆர்ஜென்டீனா அபார வெற்றி!

மீண்டும் போர்? ஜோர்டான், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!


