அரசுப் பள்ளியில் சாதிய வன்கொடுமை தொடர்பாக சார்-ஆட்சியரகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
கடலூர் வட்டம், வெள்ளக்கரை கிராமத்தைச் சேர்ந்த சிலர் வியாழக்கிழமை கடலூர் சார்-ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
வெள்ளக்கரை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 700 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு அப்பாற்பட்டவர்கள் பள்ளியில் சாதிய ரீதியிலான தூண்டுதலை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு துன்புறுத்தல்கள் ஏற்படுகிறது.
எனவே, இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற மோதல்களை களைவதற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட கமிட்டியை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.