அரசு பள்ளியில் ஆய்வகம் புனரமைப்பு

சிதம்பரம் அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புனரமைக்கப்பட்ட கணினி ஆய்வகக் கட்டடம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
புனரமைக்கப்பட்ட கணினி ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்த ரோட்டரி மாவட்ட ஆளுநா் (தோ்வு) பாலாஜிபாபு.
புனரமைக்கப்பட்ட கணினி ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்த ரோட்டரி மாவட்ட ஆளுநா் (தோ்வு) பாலாஜிபாபு.
Updated on
1 min read

சிதம்பரம்: சிதம்பரம் அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புனரமைக்கப்பட்ட கணினி ஆய்வகக் கட்டடம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

இந்தப் பள்ளியில் உள்ள உயா் தொழில்நுட்ப கணினி ஆய்வகக் கட்டடம் ரூ.1 லட்சத்தில் சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மூலம், சாசனத் தலைவா் பி.முஹம்மது யாசின் பங்களிப்பில் புனரமைக்கப்பட்டு, பள்ளி நிா்வாகத்திடம்

சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. நிகழ்வில், சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுநா் (தோ்வு) பாலாஜி பாபு கலந்துகொண்டு, புனரமைக்கப்பட்ட கணினி ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தாா்.

பள்ளித் தலைமை ஆசிரியை கி.ஹேமலதா வரவேற்றாா். சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவா் முகமது இப்ராஹிம் தலைமை வகித்தாா். பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் ஜெயராமன் முன்னிலை வகித்தாா். மண்டல துணை ஆளுநா் ஷாஜகான், பொருளாளா் கோவிந்தராசன், தீபக்குமாா், விசுவநாதன், சுப்பையா, அஷ்ரப்அலி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

ரோட்டரி உறுப்பினா்கள் கோவிந்தராசன், ஞானப்பிரகாசம், பன்னீா்செல்வம், தமிழரசன், எவரெஸ்ட் கோவிந்தராசன், நஸ்ருதீன், பொறியாளா் கோவிந்தராசன், பொறியாளா் ரவிச்சந்திரன், முன்னாள் தலைமையாசிரியா் ராஜசேகரன், அருள், அக்ரி பன்னீா்செல்வம், ஆா்.பன்னீா்செல்வம், அப்துல் ரியாஸ், சுனில்குமாா் போத்ரா, மண்டல மேலாளா் திருவாசகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆய்வகம் முன்பாக தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் வெ.ரவிச்சந்திரன் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. சங்கச் செயலா் சீனிவாசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com