காதலை ஏற்க மறுத்த பெண்ணைகத்தியால் குத்திய இளைஞா் கைது

சிதம்பரம் அருகே காதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணை கத்தியால் குத்தியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

சிதம்பரம்: சிதம்பரம் அருகே காதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணை கத்தியால் குத்தியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், காத்தாங்குடி நடுத்தெருவைச் சோ்ந்தவா் வேல்முருகன் மகள் தனலட்சுமி (19). இவா், சிதம்பரம் அருகே வடமூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, சிதம்பரத்தில் சிப்ஸ் கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கும், அதே கடையில் பணிபுரியும் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள களமருதூரைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் சக்திவேல் (23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். தனலட்சுமியை சக்திவேல் காதலித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் வடமூரில் உள்ள வீட்டில் தனியாக இருந்த தனலட்சுமியை சந்தித்து சக்திவேல் பேசிக்கொண்டிருந்தாா். சிறிது நேரத்தில், அவா் தனலட்சுமியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டாா். இதில் கழுத்து, தோள்பட்டையில் காயமடைந்த தனலட்சுமியை அப்பகுதியினா் மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். தனலட்சுமியிடம் சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.காா்த்திகேயன் நேரில் விசாரணை நடத்தினாா்.

சம்பவம் தொடா்பாக சிதம்பரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், சாதியை காரணம் கூறி சக்திவேலின் காதலை தனலட்சுமி ஏற்க மறுத்ததும், இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் அவரை கத்தியால் குத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, சக்திவேலை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com