மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

காவலர்கள், அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை புதன்கிழமை வழங்கப்பட்டது.
Updated on
1 min read

காவலர்கள், அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை புதன்கிழமை வழங்கப்பட்டது.
 காவல் துறையில் பணியாற்றுவோர், அமைச்சு பணியாளர்கள் ஆகியோரது குடும்பத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் உயர் கல்விக்காக ஆண்டுதோறும் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
 பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 7,500, ரூ. 5,500, ரூ. 3,500, 4 முதல் 10 இடம் வரை ரூ. 2,500 வழங்கப்படுகிறது.
 இதேபோல, பத்தாம் வகுப்பு தேர்வானவர்களுக்கு முதல் இடம் பெறும் மாணவருக்கு ரூ. 6,500, இரண்டு, மூன்றாம் இடத்துக்கு ரூ. 4,500, நான்காம் இடத்துக்கு ரூ. 2,500, 5 முதல் 10 இடம் வரை ரூ. 2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
 அதன்படி, கடலூர் மாவட்டத்தில் 2017 - 18 ஆம் ஆண்டுக்கான கல்வி ஊக்கத் தொகை, பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 10 மாணவர்களுக்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 10 மாணவர்களுக்கும் என மொத்தம் 20 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் வழங்கினார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com