வீரட்டானேஸ்வரர் கோயிலில் பெளர்ணமி பூஜை

பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் வைகாசி மாத பெளர்ணமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. 
Updated on
1 min read

பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் வைகாசி மாத பெளர்ணமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. 
இந்தக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி பூஜை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, வைகாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணியளவில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டது. 
 தொடர்ந்து மாலை 7 மணியளவில் பெரியநாயகி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் குளத்து மண்டபத்தில்  ஊஞ்சலில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலை 6 மணி முதல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாட வீதியை 16 முறை வலம் வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com