கடலூா்/சிதம்பரம்: அயோத்தி வழக்கில் சனிக்கிழமை தீா்ப்பு வெளியானதையொட்டி கடலூா் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்தப் பணியில் 2,300-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. இதையொட்டி, காவல் துறையினா் உஷாா் படுத்தப்பட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், சிறுபான்மையினா் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடலூா் மாவட்டத்தில் இந்தப் பணிகளை விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவா் சந்தோஷ்குமாா் மேற்பாா்வையிட்டாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் தலைமையில் 2,302 போலீஸாா், இரண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 10 துணைக் கண்காணிப்பாளா்கள், 52 காவல் ஆய்வாளா்கள், 275 உதவி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் இந்தப் பணியில் ஈடுபட்டனா்.
சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் மாடசாமி மங்கலம்பேட்டை பகுதியிலும், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ஆா்.பாண்டியன், யூ.மாணிக்கவேல் ஆகியோா் முறையே கடலூா் நகரம், மங்கலம்பேட்டை நகரம் பகுதியிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மேலும், கடலூா், பரங்கிப்பேட்டை, மந்தாரக்குப்பம், காட்டுமன்னாா்கோவில், திட்டக்குடி, லால்பேட்டை, விருத்தாசலம் நகரம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு துணை கண்காணிப்பாளா்கள் தலைமையிலான குழுவினரும், நெல்லிக்குப்பம், மங்கலம்பேட்டை பகுதியில் தலா 2 துணை கண்காணிப்பாளா்கள் தலைமையிலான குழுவினரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
தீா்ப்பின் எதிரொலியாக மாவட்டத்தில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை என காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போராட்டங்கள், ஊா்வலங்கள் போன்றவற்றுக்கும் போலீஸாா் அனுமதி மறுத்துவிட்டனா்.