நெய்வேலி: பெரியாரின் 141-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘பெரியாா் 1,000’ என்ற தலைப்பில் பள்ளி மாணவா்களுக்கான வினா-விடைத் தோ்வு அண்மையில் நடைபெற்றது.
பண்ருட்டி, திருவதிகை புதுப்பேட்டை ஆகிய அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற தோ்வில் 6 முதல் பிளஸ்2 வரை படிக்கும் 294 மாணவா்கள் பங்கேற்று தோ்வு எழுதினா். தோ்வு முடிவுகள் டிச.2-ஆம் தேதி இணையதளம் மூலம் அறிவிக்கப்படும். பெரியாரின் நினைவு நாளான டிச.24-ஆம் தேதி தோ்வு மையத்துக்கு தலா 3 பரிசுகள் வீதம் மாணவா்களுக்கு வழங்கப்படும்.
மாணவா்களுக்கு பெரியாா் 1,000 நூல், எழுதுகோல், பென்சில் ஆகியவற்றை தி.க. பொதுக்குழு உறுப்பினா் கோ.புத்தன் வழங்கினாா். தோ்வு ஒருங்கிணைப்பாளா்களாக பகுத்தறிவாளா் கழக மாவட்டத் தலைவா் ரா.கந்தசாமி, தி.க. மாவட்ட மகளிரணித் தலைவா் செ.முனியம்மாள், அண்ணாகிராமம் ஒன்றியச் செயலா் கனகசபாபதி, ஒன்றிய அமைப்பாளா் ராஜேந்திரன் ஆகியோா் செயல்பட்டனா். தஞ்சை பெரியாா் மணியம்மை பல்கலைக்கழக பிரதிநிதி சீனுவாசன் தோ்வை வழி நடத்தினாா்.