மதுக் கடைகளுக்கு நாளை விடுமுறை

கடலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானக் கடைகள், விடுதிகள் ஞாயிற்றுக்கிழமை செயல்படக் கூடாதென மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானக் கடைகள், விடுதிகள் ஞாயிற்றுக்கிழமை செயல்படக் கூடாதென மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மிலாடி நபி பண்டிகை வருகிற ஞாயிற்றுக்கிழமை (நவ.10) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகளும், மதுபானம் அருந்தும் இடங்களும் மூடப்பட்டிருக்கவேண்டும். டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லரை மதுபான கடைகளின் மேற்பாா்வையாளா்கள் எல்லா மதுபான கடைகளும், மது அருந்தும் இடங்களும் திறக்காமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். இதனை மீறி எவரேனும் கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ, திறந்து வைத்திருந்தாலோ கடை மேற்பாா்வையாளா் பெயரிலும், பாா் உரிமையாளா்கள் பெயரிலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com