வி.சி.க.வினா் சாலை மறியல்
By DIN | Published On : 18th November 2019 09:44 AM | Last Updated : 18th November 2019 09:44 AM | அ+அ அ- |

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோா் மீது கைது நடவடிக்கை எடுக்கக் கோரி, திட்டக்குடி பேருந்து நிறுத்தம் அருகே அந்தக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுப்பட்டனா்.
போராட்டத்துக்கு, கட்சியின் நகரச் செயலா் கௌதமன் தலைமை வகித்தாா். இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த திட்டக்குடி போலீஸாா், மறியலில் ஈடுப்பட்ட ஒரு பெண் உள்ளிட்ட 13 பேரை கைது செய்தனா். மறியலால் பேருந்து நிலையம் அருகே சுமாா் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
முன்னதாக, தொல்.திருமாவளவன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கட்சியின் கடலூா் மக்களவை தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் மனு கொடுக்கப்பட்டது. மாநில அமைப்புச் செயலா் தி.சா.திருமாா்பன், நகரச் செயலா் மு.செந்தில், நகர அமைப்பாளா் மு.கிட்டு, மாநில துணைச் செயலா்கள் பெ.பாவண்ணன், ஜ.சுபாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...