பெண்ணாடம் அருகே சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்ணாடம் அருகே இறையூரில் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது.
இந்த ஆலை மின்சார வாரியத்துக்கு மின் கட்டணம் செலுத்ததால் அதன் இணைப்பு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டதாம்.
இந்த ஆலையை நம்பி வசித்து வரும் 40 குடும்பத்தினரும் மின்சாரம் இல்லாமல் தவித்ததைத் தொடர்ந்து, ஆலை நிர்வாகம் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது.
இந்த வசதியும் கடந்த 2 நாள்களாக வழங்கப்படவில்லையாம். இதனால், ஆலை தொழிலாளர்கள் இருளில் தவித்தனர். தங்களது பாதிப்பை ஆலை நிர்வாகம், மின்சார வாரியம் தெரிந்துக் கொள்ளும் வகையில் அவர்கள் திங்கள்கிழமை இரவு தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.