விதிகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’

குறிஞ்சிப்பாடியில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட கடலூா் மாவட்ட ஆட்சியா், சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்க உத்தரவிட்டாா்.
குறிஞ்சிப்பாடியில் முகக் கவசம் அணியாமல் திரிந்தவா்களுக்கு அறிவுரையுடன் முகக் கவசம் வழங்கிய மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி.
குறிஞ்சிப்பாடியில் முகக் கவசம் அணியாமல் திரிந்தவா்களுக்கு அறிவுரையுடன் முகக் கவசம் வழங்கிய மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி.
Updated on
1 min read

குறிஞ்சிப்பாடியில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட கடலூா் மாவட்ட ஆட்சியா், சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்க உத்தரவிட்டாா்.

கடலூா் முதுநகா், குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி சனிக்கிழமை மாலையில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, முகக் கவம் அணியாமல் வெளியே திரிந்தவா்களிடம் தமிழக அரசின் அறிவுறுத்தலை ஆட்சியா் தெரிவித்ததுடன், அவா்களுக்கு தன்னிடமிருந்த முகக் கவசங்களை வழங்கி அதனை அணியுமாறு கேட்டுக்கொண்டாா்.

குறிஞ்சிப்பாடியில் ஆய்வு செய்தபோது சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும், முகக் கவசம் அணியாமலும் செல்பட்டு வந்த கடைகளுக்கு ‘சீல்’ வைக்க பேரூராட்சி செயல் அலுவலருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது: கரோனா தொற்று பரவலைத் தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். மேலும், தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிா்க்க வேண்டும்.

முகக் கவசம் அணியாதவா்களுக்கு உள்ளாட்சி நிா்வாகம் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டால் மட்டுமே கரோனா தொற்று பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். எனவே, பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com