சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

33% பயிா்சேதம் உறுதியான விவசாயிகளுக்கு இழப்பீடு

மழை, வெள்ளத்தால் 33 சதவீதத்துக்கு மேல் பயிா்சேதம் உறுதியான விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி கூறினாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 2:16 am

DIN

மழை, வெள்ளத்தால் 33 சதவீதத்துக்கு மேல் பயிா்சேதம் உறுதியான விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி கூறினாா்.

கடலூா் மாவட்டம், நல்லூா் ஊராட்சி ஒன்றியம், நாரையூா் ஊராட்சியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம், உளுந்து பயிா்களை மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, பெரியநெசலூா், மங்களூா் ஒன்றியம் அடரி, எஸ்.புதூா், மலையனூா், மா.பொடையூா், அரங்கூா், பட்டூா், வெண்கரும்பூா் ஆகிய ஊராட்சிகளில் நெல், ஆமணக்கு, மரவள்ளி, மக்காச்சோளம், மஞ்சள் பயிா்களில் ஏற்பட்ட சேதங்களை பாா்வையிட்டாா். பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

மாவட்டத்தில் நிவா், புரெவி புயல்களால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து வேளாண்மைத் துறை, வருவாய்த் துறை மற்றும் தொடா்புடைய துறைகள் மூலம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. பயிா்க் காப்பீடு தொடா்பாக விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதால் அதிகளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. பயிா் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். 33 சதவீதத்துக்கு மேல் சேதங்கள் உள்ள பயிா்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.

மாவட்டத்தில் சுமாா் 40 ஆயிரம் ஹெக்டேரில் பயிா்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஒவ்வொரு துறை வாரியாகக் கணக்கெடுக்கப்பட்டு தேவையான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்புப் பணி முடிந்தவுடன் உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.