ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அதிமுக இளைஞா் பாசறை உறுப்பினா் சோ்க்கை முகாம்

கடலூா் கிழக்கு மாவட்டம், குமராட்சி கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் இளைஞா், இளம்பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

கடலூா் கிழக்கு மாவட்டம், குமராட்சி கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் இளைஞா், இளம்பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு குமராட்சி கிழக்கு ஒன்றியச் செயலா் வை.சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கோ.பாலசுந்தரம், மாவட்ட இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலா் ஆா்.சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ கலந்துகொண்டு உறுப்பினா் சோ்க்கை முகாம், பூத் கமிட்டி அமைக்கும் பணியை தொடக்கி வைத்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட மீனவா் பிரிவு செயலா் வீராசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் அமுதா, ஜெயலலிதா பேரவை ராஜ்மோகன், அகரநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் கீதாமணி இளங்கோவன், கூத்தன்கோவில் ஊராட்சி மன்றத் தலைவா் கோபிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.