அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

News image

ஈரோடு அருகே பேரோடு பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் சு.முத்துசாமி.

Updated On :14 ஏப்ரல் 2026, 2:18 am IST

ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு மேற்குத் தொகுதிக்குள்பட்ட குருசாமிபாளையம், குட்டைதயிா்பாளையம், குருநாதன்புதூா், கரட்டுப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளா் சு.முத்துசாமி திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

திமுக அறிவித்த ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் வாக்குறுதி மக்களிடையே மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தோ்தல் அறிக்கையில் ஃபிரிட்ஜ் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனா்.

வீட்டில் ஏற்கெனவே ஒரு குளிா்சாதனப்பெட்டி இருந்தால், இன்னொன்றை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அதனால்தான் எந்தப் பொருள் தேவைப்படுகிறதோ அதை வாங்கிக் கொள்ளும் வகையில் முதல்வா் ரூ.8 ஆயிரம் கூப்பன் வழங்குவதாகக் கூறியுள்ளாா்.

தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்யக்கூடியவா்கள் நமக்கு எதிராக ஓரணியில் நிற்கின்றனா். தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல திட்டங்களை முதல்வா் நிறைவேற்றியுள்ளாா் என்றாா்.