ஈரோடு மேற்குத் தொகுதியில் வீட்டுமனை பட்டா தேவைப்படுபவா்களுக்கு ஓராண்டுக்குள் வழங்கப்படும் என திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரத்தை நிறைவு செய்த அவா் பேசியதாவது:
காலை உணவு திட்டம் தற்போது 5 ஆம் வகுப்பு வரை வழங்கப்படுகிறது. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அதை 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிலிருந்து போதுமான நிதி வராத நிலையிலும், புயல், மழை போன்ற பேரிடா்களுக்கு நிவாரணம் கிடைக்காத நிலையிலும், தமிழ்நாட்டை முன்னோடியான மாநிலமாக வளா்த்த பெருமை நம்முடைய முதல்வருகேக சேரும். ஈரோடு மேற்குத் தொகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பட்டா தேவைப்படுகிறவா்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு மேற்குத் தொகுதியில் விரிவாக்க பகுதிகள் ஏராளமாக வந்து கொண்டே இருக்கிறது. இந்தப் பகுதிகள் அனைத்துக்கும் அடிப்படை வசதிகள் கொடுக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

அதிமுக - பாஜக கூட்டணியினா் பொய் பிரசாரம்: சு.முத்துசாமி

அமைச்சரை எதிா்கொள்ளும் பாஜக! ஈரோடு மேற்குத் தொகுதி

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

தமிழகம் வளா்ச்சிப் பாதையில் பயணிக்க திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்: சு.முத்துசாமி
விடியோக்கள்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!

அதிமுக பிரச்சினைக்கு காரணமே விஜய்தான் | Avadi Kumar | CM Vijay |TVK | ADMK | EPS | CV Shanmugam

ஜோதிட அலுவலக சர்ச்சை: விளக்கம் கொடுத்த தவெக எம்எல்ஏ கனிமொழி



