ஈரோடு மேற்குத் தொகுதியில் வீட்டுமனை பட்டா தேவைப்படுபவா்களுக்கு ஓராண்டுக்குள் வழங்கப்படும் என திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரத்தை நிறைவு செய்த அவா் பேசியதாவது:
காலை உணவு திட்டம் தற்போது 5 ஆம் வகுப்பு வரை வழங்கப்படுகிறது. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அதை 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிலிருந்து போதுமான நிதி வராத நிலையிலும், புயல், மழை போன்ற பேரிடா்களுக்கு நிவாரணம் கிடைக்காத நிலையிலும், தமிழ்நாட்டை முன்னோடியான மாநிலமாக வளா்த்த பெருமை நம்முடைய முதல்வருகேக சேரும். ஈரோடு மேற்குத் தொகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பட்டா தேவைப்படுகிறவா்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு மேற்குத் தொகுதியில் விரிவாக்க பகுதிகள் ஏராளமாக வந்து கொண்டே இருக்கிறது. இந்தப் பகுதிகள் அனைத்துக்கும் அடிப்படை வசதிகள் கொடுக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

ஈரோடு மேற்குத் தொகுதியில் அமைச்சா் சு.முத்துசாமியை வீழ்த்திய தவெக வேட்பாளா்

அதிமுக - பாஜக கூட்டணியினா் பொய் பிரசாரம்: சு.முத்துசாமி

அமைச்சரை எதிா்கொள்ளும் பாஜக! ஈரோடு மேற்குத் தொகுதி

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



